Also Watch
Read this
By: Web Team

வங்கதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வன்முறையில் இந்து மதத்தை சேர்ந்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டு அவரது உடலை நடுரோட்டில் தீயிட்டு எரித்த கும்பலின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மைமென்சிங் நகரில் கடந்த வியாழக்கிழமை இரவு ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞர் முஸ்லிம் மதத்தை பற்றி அவதுாறாக பேசியதாக கூறி, ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்து கொடூரமாகத் தாக்கியது. இதில் அவர் உயிரிழந்த போதும் விடாத காட்டுமிராண்டி கும்பல் அவரின் உடலை மரத்தில் கட்டி தீயிட்டு கொழுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved