தெற்கு இஸ்ரேலில் கடுமையாக வீசிய புழுதி புயலால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இஸ்ரேலின் ஜெருசலேம் அருகே கடுமையான வெப்பம் காரணமாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் சுதந்திர தின கொண்டாட்டங்களை அரசாங்கம் ரத்து செய்தது. இந்நிலையில் தெற்கு இஸ்ரேலில் உள்ள நெகேவ் பாலைவனம் மற்றும் Beersheba பகுதியை, புழுதி புயல் பலமாக தாக்கியது. அப்போது மக்கள் தங்களது கண்களை திறக்கவே சிரமப்பட்டனர்.