Also Watch
Read this
Posted on: Nov 22, 2025 03:47 PM
By: Web Team

அமெரிக்காவில் அதிபர் டிரம்பும் நியூ யார்க் மேயராக வெற்றி பெற்றுள்ள ஜொஹ்ரான் மம்தானியும் நட்புடன் சந்தித்துக் கொண்டதை பாராட்டி உள்ள காங்கிரஸ் எம்பி சசிதரூர், தேர்தலுக்கு பிறகு அரசியல் எதிரிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ள அவர்,ஜனநாயகம் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தலில் கடுமையாக எதிர்த்தாலும் அது முடிந்த பின்னர், நாட்டின் நலனை கருதி தலைவர்கள் நட்புடன் நடந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவிலும் இது நடக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும், அதற்கான முயற்சிகளை தாம் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved