Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 01:25 PM
By: Manigandan Raja

போரை நிறுத்த முயற்சி :
அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராகவும், பெருமையுடனும் உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து மறைமுக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாகாணத்திலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் வரவேற்பதோடு, முழுமையாக ஆதரிப்பதாக பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved