Also Watch
Read this
By: Manigandan Raja

தேங்கியிருந்த தண்ணீரில் சிக்கிய கார் :
சேலம் மாநகர் கன்னங்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்த வெங்கடாசலம் ராதா தம்பதியினர் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டியில் இருக்கும் இவர்களது உறவினரான மணி மகன் திருமணத்தை முன்னிட்டு நலுங்கு வைப்பதற்காக இருவரும் கார் மூலம் இன்று காலை புறப்பட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் செம்மாண்டப்பட்டி ஏனாதி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் நேற்று இரவு பெய்த கன மழையினால் தண்ணீர் முழுவதும் நிரம்பி இருந்தது.
இதையடுத்து இருவரும் தண்ணீரின் ஆழம் இருப்பதை அறியாமல் சுரங்க பாதையை கடக்க முயன்றனர்.
அப்பொழுது தண்ணீர் அதிகமாக இருந்ததால் காரை முன்னக்கும் பின்னுக்கும் எடுக்க முடியாமல் கார் ஒரே இடத்தில் நின்ற நிலையில் கார் முழுவதும் மூழ்கியது.
இதில் கணவன் மனைவி இருவரும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவம் அறிந்த ஓமலூர் போலீசார் சுரங்கப்பதைக்கு சென்று இரண்டு உடல்களை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved