காசாவில் வழங்கப்பட்ட கோதுமை மாவில் பெரும்பாலானவை பசியால் வாடும் மக்களால் எடுக்கப்பட்டதாக ஐ.நா. கூறியுள்ளது. கடந்த மார்ச் முதல் காசாவிற்குள் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல் விதித்துள்ள தடையால், காசா மக்கள் பசி, பட்டினியால் மடிந்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் அனுமதியுடன், 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் கோதுமை மாவு லாரிகளில் காசாவிற்கு எடுத்து செல்லப்பட்டது. லாரி காசாவிற்குள் நுழைவதற்கு முன்பே அதில் பெரும்பாலானவை பட்டினியால் வாடும் மக்களால் எடுக்கப்பட்டதாகவும் சில இடங்களில் ஆயுதமேந்திய கும்பல்களால் கொள்ளையடிக்கப்பட்டதாகவும்.