கனடாவில், பிரதமர் மோடி, அமித் ஷா, அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரின் உருவப் பொம்மைகள் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற காட்சியை டிரக்கில் வடிவமைத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஊர்வலமாக சென்றனர். கனடா தலைநகரான ஒட்டாவின் ஒரு பகுதியான மார்ட்டன் குருத்வாரா என்ற இடத்தில் இந்துக்களுக்கு எதிரான இந்த நிகழ்ச்சியை காலிஸ்தானிகள் நடத்தினர்.கனடாவில் வசிக்கும் சுமார் எட்டு லட்சம் இந்துக்களை இந்தியாவுக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப வேண்டும் என்ற முழக்கமும் இந்த நிகழ்ச்சியில் எழுப்பப்பட்டது. கனடாவில் சீக்கிய குருத்வாரா தாக்கப்பட்டதன் எதிரொலியாக இந்து கோவில்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டன. இந்த நிலையில் காலிஸ்தானிகள் நடத்திய இந்த நிகழ்ச்சியின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.