Also Watch
Read this
Posted on: Mar 15, 2026 01:31 PM
By: Manigandan Raja

அலைக்கழிப்பு எனப்புகார் :
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி அருகே வசிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் எனப்படும் ஆதிப்பழங்குடி மக்களின் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் கிடைக்காததால், உயர்கல்வி படிப்பு கனவாகிப் போவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பூம்பூம் மாட்டுக்காரன் கொட்டாய் பகுதியில் வசிக்கும் ஆதிப்பழங்குடி மக்களின் பிள்ளைகளுக்கு,ST சாதி சான்றிதழ் கோரி பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பிள்ளைகள் மேற்படிப்பை தொடர முடியாததாக பெற்றோர் வேதனை தெரிவித்த நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க மாணவர்கள் வலியுறுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved