ஈரான் சரணடைந்து விட்டது : வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்கு ஈரான் மன்னிப்புக் கோரியிருந்த நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் சரணடைந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் இதுவரை தோல்வியையே சந்திக்காத ஈரான், சுற்றியுள்ள மத்திய கிழக்கு நாடுகளிடம் தோற்றது இதுவே முதல் முறை என தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குள்ளாகி தோற்கடிக்கப்பட்ட ஈரான், மன்னிப்புக் கேட்டு, தனது மத்திய கிழக்கு அண்டை நாடுகளிடம் சரணடைந்துள்ளதாகவும், இந்த வாக்குறுதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலின் காரணமாக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Related Link கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை