ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான் : ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் இந்திய கொடி கட்டப்பட்ட 37 கப்பல்கள் மற்றும் அக்கப்பல்களில் உள்ள ஆயிரத்து 109 மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கப்பல்களில் சில இந்திய துறைமுகங்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றி வந்தவை எனவும், மற்ற கப்பல்கள் வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோலிய பொருள்களை ஏற்றிவரச் சென்றவை எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகம், சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Related Link ஈரான் போர் எதிரொலி - கச்சா எண்ணெய் விலை 8% உயர்வு