துபாயில் ஸ்கூபா டைவிங்கின் போது மாரடைப்பு ஏற்பட்டு இந்திய பொறியாளர் மரணம் அடைந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் பொறியாளராக வேலை செய்து வந்தவர் கேரளாவை சேர்ந்த 29 வயதான ஈசாக் பால் ஒலக்கெங்கில். ((Issac Paul Olakkengil,)) இவர் பக்ரீத் விடுமுறையை கொண்டாட குடும்பத்தினருடன் ஜுமைரா கடற்கரை சென்றபோது ஸ்கூபா டைவிங் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்த நிலையில், உடலை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.