Also Watch
Read this
By: Web Team

700க்கும் அதிகமானோரை பலி கொண்ட டிட்வா புயல் பாதிப்புகளில் இருந்து இலங்கை மீண்டு வர அந்நாட்டு இராணுவத்துடன் இந்தியா ராணுவமும் கை கோர்த்துள்ளது. டிட்வா புயலால் இலங்கை பெரும் பேரழிவை சந்தித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலைகள், பாலங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்நாட்டு ராணுவம் மற்றும் சிவில் நிர்வாகத்துடன் இந்திய ராணுவம் இணைந்து சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved