Also Watch
Read this
By: Web Team

காபூலில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக துராந்த் எல்லைக் கோட்டில் தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
எல்லை விரிவாக்கம் தொடர்பாக பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் விமான படையினர் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்கானிஸ்தான், எல்லையோர மாகாணங்களான குனர், ஹெல்மண்ட்டில் உள்ள பாகிஸ்தான் சோதனை சாவடிகள் மீது தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றியுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved