Also Watch
Read this
Posted on: May 03, 2025 01:57 PM
By: Srini Vasan

இந்தியாவுடனான பதற்றங்களை அதிகரிக்கும் வகையில் 450 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் அப்தாலி ((Abdali))ஏவுகணையை பாகிஸ்தான் பரிசோதித்தது.
அப்தாலி ஆயுத அமைப்பு என்று அழைக்கப்படும் தரையிலிருந்து தரைக்கு இலக்கை தாக்கும் ஏவுகணை, அணு ஆயுதங்களை கையாளும் பாகிஸ்தானின் இராணுவப் பயிற்சியான 'எக்சர்சைஸ் இண்டஸ்' பிரிவால் சோதிக்கப்பட்டது.
சோன்மியானி எல்லைகளில் நடத்தப்பட்ட இந்த சோதனை நிகழ்வில் ராணுவ தளபதி, மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை ஒரு பொறுப்பற்ற ஆத்திரமூட்டும் செயல் என இந்தியா விமர்சித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved