தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை அன்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில், 631 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1 லட்சத்து 12 ஆயிரத்து 561 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நடத்தப்பட்ட லோக் அதாலத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 1 லட்சத்து 4 ஆயிரத்து 789 வழக்குகளும், நீதிமன்ற விசாரணைக்கு வராத 7 ஆயிரத்து 772 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகளும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 3 அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள் சார்பில் மாநிலம் முழுவதும் 499 அமர்வுகள் மூலமாக வழக்குகள் விசாரிக்கப்பட்டன.