வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே கரையை கடந்தது. தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.