Also Watch
Read this
By: Web Team

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 31.24 TMC நீரை திறந்து விட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.
காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 117வது கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது ஜூன் மாதத்திற்கான தண்ணீரை விட கூடுதலாகவே திறந்து விட்டிருப்பதாக கர்நாடகா விளக்கம் அளித்தது.
இருப்பினும் ஜூலை மாதத்திற்கான 31.24 TMC நீரை திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நாளை டெல்லியில் மீண்டும் கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved