விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இல்லாத இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் தோல்வியை சந்திக்கும் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் தெரிவித்தார். விராட், ரோகித்திடம் இப்போதும் நிறைய கிரிக்கெட் எஞ்சியுள்ளதாக தாம் கருதுவதாக தெரிவித்த அவர், முழுமையாக இளம் வீரர்களை மட்டுமே வைத்து அணி உருவாக்கினால் அது எப்போதும் கீழே விழும் என கூறினார்.