மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இலங்கை-நியூசிலாந்து இடையேயான ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் குவித்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யவிருந்த நிலையில், மழை குறிக்கிட்டது.