Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 01:06 PM
By: Manigandan Raja

பிராந்திய விளையாட்டு அதிகாரி பதவி :
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உட்பட 6 விளையாட்டு வீரர்களுக்கு உத்தரப் பிரதேசத்தில் அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. ரிங்கு சிங்குக்கு பிராந்திய விளையாட்டு அதிகாரி பதவியும், பாராலிம்பிக்ஸ் வீரர் பிரவீன் குமார், ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில் பதக்கம் வென்ற ராஜ்குமார் பால் ஆகியோர் காவல்துறையில் டிஎஸ்பிக்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
பாரா-தடகள வீரர்களான அஜித் சிங், சிம்ரன் ஆகியோர் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளாகவும், பாரா-தடகள வீரர் பிரீத்தி பால் வட்டார வளர்ச்சித் துறை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved