உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் குகேஷ் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை எதிர்த்து, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் விளையாடி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இத்தொடரின் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. தொடர்ந்து நடைபெற்ற 3வது சுற்று போட்டியில், 37-வது நகர்த்தலின் போது இந்திய வீரர் குகேஷ் வெற்றி பெற்றார். 3 சுற்றுகளின் முடிவில் குகேஷ், டிங் லிரென் ஆகியோர் தலா 1.5 புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளனர்.