பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே, அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 4க்கு 6, 6க்கு 1, 6க்கு 2 என்ற செட் கணக்கில் செபாஸ்டியன் பேஸை வீழ்த்திய ஹோல்கர் ரூனே காலிறுதிக்கு முன்னேறினார்.