Also Watch
Read this
By: Manigandan Raja

ஓபன் பேட்மிண்டன் தொடர் :
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்ஷயா சென் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் கனடாவின் விக்டர் லாய் ஆகியோர் மோதினர்.
இதில், சிறப்பாக விளையாடிய லக்ஷயா சென் முதல் செட்டை 21-16 என வென்ற நிலையில், 2-வது செட்டை கனடா வீரர் 21-13 என கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் அதிரடியாக விளையாடிய லக்ஷயா சென் 21-15 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved