இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்திய ஏ அணி 350 ரன்களுக்குள் சுருண்டது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இந்தியா 'ஏ' அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழந்து 319 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, 2-ஆவது நாளில் 350 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2-ஆவது நாளில் இந்தியா 'ஏ' அணி 348 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக, கே.எல். ராகுல் 116, துருவ் ஜூரல் 52, கருண் நாயர் 40, நிதிஷ் குமார் ரெட்டி 34 ரன்களும் எடுத்திருந்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 20 ரன்களைக்கூட தாண்டவில்லை. தொடர்ந்து இங்கிலாந்து லயன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.