Also Watch
Read this
Posted on: Jul 03, 2025 10:30 AM
By: Web Team

விருதுநகர் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கோரி போராடிய மக்களை பார்த்து, ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும் என விருதுநகர் எஸ்பி மிரட்டியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா என கேள்வி எழுப்பியுள்ள அவர், ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம் வரலாற்று பாசிசம் தோற்றுவிடும் என விமர்சித்துள்ளார்.
மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்துவிடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் ஸ்டாலின் அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved