Also Watch
Read this
Posted on: Nov 28, 2024 07:56 AM
By: Srini Vasan

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved