Also Watch
Read this
By: Web Team

199 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2018ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை காங்கிரஸ் கட்சி தாமதமாக தாக்கல் செய்ததுடன், நன்கொடையாக வந்த தொகைக்கு வரி விலக்கு கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்ததில், விதிகளை மீறி காங்கிரஸ் கட்சி நன்கொடை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டதால், வரி விலக்கு அளிக்க வருமான வரித்துறை மறுத்தது. அதோடு, 199 கோடிக்கு வருமான வரி செலுத்த சொல்லி நோட்டீஸ் அனுப்பியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved