மதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை குறைசொல்ல விரும்பவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக கட்சியின் தலைமை அலுவலத்தின் 32 ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி வைகோ, கட்சிக் கொடியை ஏற்றினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தம்மோடு வந்தால் எம்.எல்.ஏ., அமைச்சர் பதவி எல்லாம் கிடைக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் இந்தியில் நான்கு வார்த்தைகளை தவிர ஒன்றும் தெரியாது எனவும் கூறினார்.