தமிழக அரசு நீதிமன்றத்தை நாடிவிடும் என்ற அச்சத்தில் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்ததாக தெரிவித்தார்.