Also Watch
Read this
By: Web Team

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து எடப்பாடி பழனிசாமி குழந்தைத்தனமாக பேசியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன் ஆய்வு செய்தனர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் திமுகவினர் வீட்டிற்கு வரும்போது சாவியை கொடுக்காதீர்கள், ஆள் இல்லாத நேரத்தில் திருடி விடுவார்கள் என அரசியல் தலைவர்கள் யாரும் பேசாத கேவலமான பேச்சை எடப்பாடி பேசியதாகவும், திருடனுக்குத்தான் திருட்டு புத்தி இருக்கும் என்றும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved