தமிழகம் இரு மொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுகிறது என்றால் தனியார் பள்ளியில் மட்டும் ஏன் மும்மொழி கொள்கை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "கெட் அவுட்" என்று சொல்லும் நடிகர் விஜய் விரைவில் "கட் அவுட்" வைத்து நடிக்கச் சென்று விடுவார் என்றார். மேலும், தமிழ்நாட்டில் திராவிட மாடல் எனக் கூறி தமிழை திமுக புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினார்.