Also Watch
Read this
By: Web Team

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும், சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனுத் தாக்கலின் போது, அதிமுகவின் தம்பிதுரை உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்களும் கலந்து கொண்டனர்.
குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் அன்றைய தினமே, மாலை 5 மணி அளவில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 21ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved