ராஜஸ்தான் அஜ்மீர் தர்காவில் நடக்கும் உருஸ் விழாவுக்கான புனித போர்வையை பிரதமர் மோடி காணிக்கையாக வழங்கினார். இஸ்லாமிய மார்கத்தை சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொய்னுதீன் சிஸ்தியின் நினைவிடம் அஜ்மீரில் உள்ளது. அவரது 813 வது உருஸ் எனப்படும் சந்தனக் கூடு விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.