பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக அதிபர் டிரம்ப் உறுதி அளித்ததை தொடர்ந்து அமெரிக்காவில் டிக்டாக் சேவைகளை மீண்டும் துவக்கியுள்ளதாக அதன் தாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. தாம் அதிபராக பதவி ஏற்றவுடன் டிக்டாக்கிற்கும் ஜோ பைடன் நிர்வாகத்திற்கும் இடையே உள்ள சிக்கல்கள் மூத்த அதிகாரி மூலம் சரி செய்யப்படும் என டிரம்ப் தங்களுக்கு உறுதி அளித்துள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியில் குறைந்த து 50 சதவிகித பங்குகளை அமெரிக்க முதலீட்டாளர்கள் வைத்திருந்தால், அதன் மீதான சட்ட நடவடிக்கைகளை தாம் பதவிக்கு வந்த பின்னர் கைவிடுவதாக டிரம்ப் அளித்த உறுதியை ஏற்று டிக் டாக் தனது சேவையை மீண்டும் துவக்கி உள்ளது.