கேரள கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பலில் தொடர்ந்து தீ கொளுந்து விட்டு எரியும் புதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மும்பை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கப்பலில் திங்கட்கிழமை காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் சிக்கிக் கொண்ட 22 பேரில் 18 பேர் இந்திய கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். மாயமான 4 பேரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.