மழை வெள்ளம் பாதித்த நெல்லை மற்றும் தென்காசியில் இன்று வழக்கம்போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளை திறப்பதற்கு முன்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும், மழை நீர் தேங்கி இருந்தாலோ, வேறு பாதிப்புகள் இருந்தாலோ பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அறிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.