இந்தியவீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கவுண்டி கிரிக்கெட்டில் 33 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற யார்க்ஷயர் ((Yorkshire)) அணிக்காக விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த மாதம் தொடங்கும் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக அவர் யார்க்ஷயர் ((Yorkshire)) அணியுடன் இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.