ஆந்திர மாநிலம் திருப்பதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த காருடன் சேர்த்து சிமெண்ட் சாலை அமைத்த சம்பவம் அரங்கேறியது. நில அளவீடுகளில் குளறுபடி இருப்பதாக சாலை அமைப்பதை எதிர்த்து மனு அளித்த ரூபானந்த் என்பவர், குறுக்கே காரை நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், பொறுத்து பொறுத்து பார்த்த ஒப்பந்ததாரர் காரை எடுக்க முடியாத அளவுக்கு சாலை அமைத்ததாக சொல்லப்படுகிறது.