ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக விளக்கம் அளிக்க பல்வேறு நாடுகளுக்கு சென்று திரும்பிய அனைத்து கட்சி எம்பிக்கள் குழுக்களை பிரதமர் மோடி சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான லோக் கல்யாண் மார்க்கில் இந்த முக்கிய சந்திப்பு நடைபெற்றது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு வெளிநாடுகளில் கிடைத்த ஆதரவு உள்ளிட்டவை குறித்து, இந்த எம்பிக்கள் குழுவினர் பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தார்கள். காங்கிரஸ் எம்.பி.சசி தரூர், திமுக எம்பி கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுப்ரியா சுலே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், பாஜக தலைவர்கள், முன்னாள் தூதர்கள் என 50க்கும் மேற்பட்டோர் அடங்கிய 7 குழுக்கள், 30க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டன.