மகா கும்பமேளாவை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பல்வேறு வண்ணங்களிலான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் நிலையில், பல லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பக்தர்களுக்கு தேவையான தங்குமிடம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.