தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழை எளிய மீனவர்களை துன்புறுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில், அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வது உள்ளிட்ட இலங்கை அரசின் தொடர்ச்சியான எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும் உடனடியாக இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி அபராதம் மற்றும் தண்டனைகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.