Also Watch
Read this
Posted on: May 02, 2025 12:00 PM
By: Srini Vasan

தமிழ்நாட்டு மக்களை திமுக அரசு, இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளி விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் விளாங்காட்டு வலசு கிராமத்தில் வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இபிஎஸ், ஈரோடு திருப்பூர் பகுதிகளில் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவங்களை பட்டியலிட்டு, இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை "தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்" என கூற வெட்கமாக இல்லையா? எனவும், இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved