தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா? என்று கேட்ட அமித் ஷா, மதுரையில் வந்து தமிழ், தமிழர்கள் என்று கபட வேடம் தரிப்பதாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார். ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழர்களை திருடர்கள் போல கொச்சைப்படுத்தி பேசிவிட்டு மதுரையில் கீதா உபதேசம் செய்வதா என்றும் கேள்வி எழுப்பினார்.