கேரளா கழிவுகள் தமிழ்நாட்டிற்குள் நுழைவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார். இது தொடர்பான அவரது அறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சியில் தான் கேரள கழிவுகள் அதிகளவில் தமிழகத்தில் கொட்டப்பட்டு தமிழ்நாடே குப்பைதொட்டியாக கிடந்ததாக சாடினார்.