Also Watch
Read this
By: Web Team
பஞ்சாப் மாநிலத்தில், லாட்டரியில் 1.5 கோடி ரூபாய் பரிசு வென்றவர் திருட்டு பயத்தில் குடும்பத்தினருடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஃபரித்கோட் மாவட்டம், சைடேக் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான நசீப் கவுர் என்ற பெண்ணுக்கு லாட்டரியில் 1.5 கோடி ரூபாய் பரிசு விழுந்தது. இந்த விஷயம் அக்கம் பக்கத்தில் வேகமாக பரவியதால், தங்களுக்கு கிடைக்கும் பணம் கொள்ளையடிக்கப்படுமோ என்ற அச்சத்தில் நசீப் கவுர் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டி , தங்களது செல்போன்களை அணைத்துவிட்டு ரகசிய இடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் அவர்களை அணுகி பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளிக்க அவர்கள் மீண்டும் வீடு திரும்பினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved