ஜம்மு காஷ்மீரில் 300 அடி ஆழ பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 வீரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து 6 ராணுவ வாகனங்களில் வீரர்கள் சென்று கொண்டிருந்த நிலையில், மெந்தரின் பால்னோய் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஒரு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.