கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 23 ஆயிரத்து 622 கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட தற்போது 34 மடங்கு ஏற்றுமதி அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2029ஆம் ஆண்டுக்குள் ஆயுத ஏற்றுமதி 50 ஆயிரம் கோடியை எட்ட வேண்டும் என இந்தியா இலக்கு வைத்திருப்பது குறிப்பிடதக்கது.