ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானை சில மணி நேரத்தில் மண்டியிட வைத்த இந்தியாவை கண்டு உலகமே வியந்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், எல்லைக்கு அப்பால் பல கிலோ மீட்டர் தூரத்தில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை அழிக்கும் நமது ஆற்றலை உலகமே கண்டதாக கூறினார்.