Also Watch
Read this
தவெக தனது ஆட்சியை தக்கவைக்க குதிரை பேரம் நடத்தியதாக வரும் குற்றச்சாட்டுகள் வேதனை தருகிறது என்று தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசி உள்ளார்.
“முகத்தை மூடி வந்தவர் யார்?”
* தவெக தனது ஆட்சியை தக்கவைக்க குதிரை பேரம் நடத்தியதாக வரும் குற்றச்சாட்டுகள் வேதனை தருகிறது
* தன்னை சந்திக்க அன்று முகத்தை மூடி வந்தவா் யாா் என்பதை முதலமைச்சர் விஜய் தொிவிக்க வேண்டும்
* "யாரும் முகத்தை மூடிச்சென்று யாரையும் சந்திக்க தேவையில்லை” என CM கூறினாா், உங்கள் வீட்டிற்கு வந்தவா் யாா் முதல்வரே?
- சட்டப்பேரவையில் தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா கேள்வி எழுப்பி உள்ளார்.

ராதன் பண்டிட் நியமனத்துக்கு கண்டனம்
முதலமைச்சர் விஜயின் ராஜ குருவாக இருக்கக் கூடிய ரிக்கி ராதன் பண்டிட் என்பவரை அரசியல் சிறப்பு அதிகாரியாக, அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்களின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் பிரேமலதா கூறி உள்ளார்.
உங்களுக்கு ராஜகுருவாக வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். ஜனநாயகத்தை நம்பி, இளைஞர்கள் கையில் ஆட்சியைக் கொடுத்திருக்கிற மக்களுக்கு நல் உதாரணமாக இருங்கள் என்றும் பிரேமலதா பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved