பெங்களுரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 25 பந்துகளில் அரை சதம் விளாசிய சென்னை அணி வீரர் ஆயுஷ் மாத்ரே, இளம் வயதில் குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 52-வது லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களுரு அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய 17 வயதேயான ஆயுஷ் மாத்ரே 48 பந்துகளில் 94 ரன்களை விளாசி அசத்தினார். குறிப்பாக 25 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்திய அவர், இளம் வயதில் குறைவான பந்துகளில் அரை சதம் எடுத்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.